துருக்கி – சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 15,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையில் அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பாரி நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்தது.
ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்தும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.





