இத்தாலி படகு விபத்தில் 40இற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் பலி

0
161

இத்தாலியின்(Italy) லம்பேடுசாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 40இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது,

எனினும் 11 வயதுடைய ஒரு சிறுமி மாத்திரம்  விபத்தில் உயிர் பிழைத்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் பலி

ஏனைய 44 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக  இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி படகு விபத்தில் 40இற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் பலி | Italy Boat Accident

சியரா லியோனைச்(Sierra Leone) சேர்ந்த 11 வயது சிறுமியே காற்று நிரப்பப்பட்ட டயர் குழாய்களால் செய்யப்பட்ட இரண்டு மேம்படுத்தப்பட்ட உயிர் காக்கும் ஆடையுடன் மூன்று நாட்களாக தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்பு குழுவால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

11 அடி அலைகளுடன் கூடிய பலத்த புயல்கள் தாக்கியதால், தமது படகு சில நொடிகளில் மூழ்கியதாகவும், தானும் மேலும் இருவர் – சிறிது நேரம் தண்ணீரில் ஒன்றாக இருந்ததாகவும், ஆனால் பின்னர் தொடர்பை இழந்ததாகவும் குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் கூற்றுப்படி, 10 ஆண்டுகளாக, மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றபோது 3000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.