யூடியூப்பர் கிருஷ்ணாவை மடக்கிப் பிடித்த உரவர்கள் இளவாலை பொலிசாரிடம் ஒப்படைப்பு!

0
87
யூடியூப்பர் கிருஷ்ணாவை மடக்கிப் பிடித்த உரவர்கள் இளவாலை பொலிசாரிடம் ஒப்படைப்பு!
SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் youtube சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.
குறித்த youtuber பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றி வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த youtube இருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு இன்றையதினம் குறித்த YouTuber வந்திருந்தநேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.