2025 சாம்பியன்ஸ் டிராபி: மழையால் கைவிடப்பட்ட தென்னாப்பிரிக்க – அவுஸ்திரேலிய போட்டி

0
173

ராவல்பிண்டி, கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெறவிருந்த அவுஸ்திரேலிய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2025 சாம்பியன்ஸ் டிராபி குழு பி நிலை போட்டி இடைவிடாத மழையால் கைவிடப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து ராவல்பிண்டியில் பெய்த மழையானது மைதானத்தை போட்டிக்கு தயார்படுத்துவதற்கு மைதான ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

பாகிஸ்தான் நேரப்படி இரவு 07.32 மணியளவில் குறைந்த பட்சம் டி20 ஓவர்கள் வடிவில் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தது.

எனினும், பலத்த மழை மற்றும் மைதானத்தின் ஈரப்பதம் உள்ளிட்ட காரணங்களால் நாணய சுழற்சிக் கூட மேற்கொள்ளப்படாது மாலை 05.10 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது