தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்றானது உலகம் முழுவதிலும் பரவியுள்ள நிலையில் ஒருவர் அறுவை சிகிச்சை முகக்கவசத்தை அணிந்து அதற்கு மேல் துணியினால் ஆன முகக்கவசத்தை அணிவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெறமுடியும் என்றும் ஒரே சமயத்தில் இரண்டு முகக்கவசங்களை அணிவதனால் வைரஸிலிருந்து இரு மடங்கு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியம் என அமெரிக்க தொற்றுநோயியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பொது இடங்களுக்கு செல்லும் 2 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





