தற்போது நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமாயின் காலத்தை போக்காமல் உடனடியாக கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு விசேட வைத்திய அதிகார சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
நாட்டின் அனைத்து சுகாதார பிரிவுகளும் அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாக குறித்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.





